தர்மபுரி அக் 11-
தர்மபுரி மாவட்டம் நூலஅள்ளியில் இருந்து உழவன் கொட்டை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஆங்காங்கே சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலை சேரும் சகதியமாக உள்ளது. பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தினம்தோறும் இந்த சாலை வழியே மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள். பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர் அவ்வப்போது சாலையில் வழுக்கி விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த சாலையானது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. பழுதான சாலையை அமைக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் கிராமத்துப் பெண்கள் நூதன முறையில் சாலையில் உள்ள சேற்றில் பெண்கள் நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags
தர்மபுரி