தர்மபுரி அக் 17-
தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது பணமில்லா பரிவர்த்தனை என்பது நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.
கூகுள் பே (GOOGLE PAY), போன் பே(PHONE PAY), பே டி எம்(PAYTM) போன்ற நிறுவனங்கள் மூலமாக பணமில்லா பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேளான்மைத்துரையிலும் பணமில்லாத பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அதேபோல் தருமபுரி வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த பணமில்லா பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. QR 0 ஸ்கேன் கோடு, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இனி விவசாயிகள் வேளாண்மை இடுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த பணமில்லா பரிவர்த்தனையை தர்மபுரி வட்டார விவசாயிகள் பயன்படுதிக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Tags
தர்மபுரி