தருமபுரி டிசம்பர் 25-
தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிவுறுத்தல் படி ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டு தர்மபுரி நகரப் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர், தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கழக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் புல்லட் மாரிமுத்து மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், மேற்கு மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் தேவ தேவன் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி