Monday, December 25, 2023

தருமபுரியில் கீழ் வெண்மணி தியாகிகள் தின அஞ்சலி கூட்டம்


தருமபுரி டிசம்பர் 25-

தஞ்சாவூர் மாவட்டம்,கீழ் வெண்மணியில் விவசாய தொழிலாளர்கள் வர்க்க போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகளின் 55-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி கூட்டம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் ஜெ.பிரதாபன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் மாதையன்,வட்டார செயலாளர்கள் நல்லம்பள்ளி முருகேசன்,தருமபுரி பச்சாகவுண்டர், இண்டூர் பண்டஅள்ளி மாதையன்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் எம்.மாதேஸ்வரன்,கிருஷ்ணராஜ்,ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி,நிர்வாகிகள் சுதர்சனன், மனோகரன்,முனுசாமி,மாதேஸ்,மாதம்மாள்,அலமேலுகலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home