சென்னை டிச 29-
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி,அரசு இறுதி மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு இன்று (29.12.2023) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அரசு இறுதி மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டார்.
உடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
Tags
சென்னை