மேச்சேரி சீராமனூர் ஶ்ரீ மஹா மாதேஸ்வரன் கோவில் அருகில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு திறக்கப்பட்டது

மேட்டூர் பிப் 16-

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டமன்றத் தொகுதி - மேச்சேரி பேரூராட்சி, வார்டு எண் : 8, சீராமனூர் ஶ்ரீ மஹா மாதேஸ்வரன் கோவில் அருகில் தனது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மாண்புமிகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.டிஎன்வி.எஸ். செந்தில்குமார் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேச்சேரி ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.சீனிவாசபெருமாள், ஒன்றிய பொருளாளர் காந்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் செல்வக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் ரேவதி வேலு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மஞ்சுளா செங்கோடன், சதீஸ்குமார், விமல், செயல் அலுவலர், உதவி செயற் பொறியாளர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்...
Previous Post Next Post

نموذج الاتصال