சேலம் மார்ச் 8-
பெண்மையை போற்றும் விதமாக ஆண்டு தோறும் சோனா கல்வி குழுமத்தின் சார்பில் கொண்டாடப்படும் மகளிர் தின விழா கல்லூரியின் வளாகத்தில் நடைப்பெற்றது. கல்லூரியின் தலைவர் திரு.வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில், துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா முன்னிலை வகித்தார். திருமதி சீதா வள்ளியப்பா திருமதி விசாலாட்சி சொக்கு ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் வருமான வரி துறை கூடுதல் ஆணையர் செளமியா ஐ.ஆர்.எஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அவர் பேசும் பொழுது, சவால்களை சந்திக்கும் போது தான் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும், இதற்கு தன்னம்பிக்கையும், தைரியமும் மிக அவசியம் என்றும் மேலும் பெண்கள் தங்களது குடும்ப தொழிலை முன்னேற்றுவதிலும் மற்றும் சுயதொழில் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா, அகில இந்திய அளவில் தொழில்நுட்பக் கல்வியை பெண்களும் அதிக அளவில் படிக்க வேண்டும் என்ற வகையில் முதன் முதலாக இருபாலர் தொழில்நுட்பக் கல்வி தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும், மாணவிகளின் திறமைகளை அறிந்து அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்து வருவதற்கு சோனா கல்வி குழுமங்கள் உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா பேசும் பொழுது மகளிர் தின விழா மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம் ஆனால் சோனா கல்வி குழுமத்தில் மார்ச் மாதம் முழுவதும் மகளிர் தின மாதமாக 8 மகளிர் சிறப்புவிருந்தினர்களை கொண்டு கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெருமைகுரியது என்றும் மேலும் அனைத்து மகளிருக்கும் தனது மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜீ.எம்.காதர்நவாஷ், இ.ஜெ.கவிதா மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர். விழாக்கான ஏற்பாடுகளை சோனா கல்வி குழுமத்தின் பேராசிரியைகள் குழு சிறப்பாக செய்திருந்தனர்.
Tags
சேலம்