நல்லம்பள்ளி ஜீன் 20-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் வருகின்ற ஜூலை மாதம் தருமபுரி மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளதை அடுத்து அதற்கான இடம் தேர்வு செய்யும் வகையில் பாளையம்புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி IAS அவர்கள் தலைமையில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம். பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி , மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் , பொதுக்குழு உறுப்பினர் நடராஜ் , மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கெளதம் , பிளாஸ்டிக் செல்வம் , நவீன் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags
தருமபுரி