தருமபுரி
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வடக்கு ஒன்றியம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.என்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அஇஅதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டார்.
விழாவின் சிறப்பம்சமாக கலைக் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற ஏராளமான ஆண், பெண்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்குச் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் சேர்மன் கோபால், ஒன்றிய செயலாளர் செந்தில், இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் K.P.A. டாக்டர் சந்திரமோகன், மாவட்டத் தலைவர் குபேந்திரன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர்கள் ஜெய் சிம்மன், பாலு, ஒன்றிய அவைத் தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் குண்டன், நஞ்சுண்டன், சேகர், முனிராஜி, சண்முகம், ரகு, சுந்தரேசன், குண்டுமணி, முனிராஜி, முத்துராஜ், ஜெகதா, பெருமாள், பாபு, ஐடியா மணி, தமிழரசன், முகுந்தன் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
Tags
அதிமுக