திட்டக்குடியில் கால்நடை தீவன தொழிற்சாலை


திட்டக்குடி அருகே 33 கோடி மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை ம.பொடையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் 33 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக்கன் தயாரிக்கும் திறன்கொண்ட ஆவின் கால்நடை தீவனத் தொழிற்சாலையை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து.பால்வளம்துணைப்பதிவாளர் எம். பார்த்திபன் குத்துவிளக்கேற்றிவைத்து ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இதில் ஆவின் பொது மேலாளர் டாக்டர்.வி.அருணகிரிநாதன், உதவிப் பொது மேலாளர் கால்நடை டாக்டர்.எம்.சுப்ரமணி, சி.எஸ்.ஆர்., கார்த்திக், மேலாளர் பொறியியல் நேசகுமார், மேலாளர் பொறியியல் பத்மநாபன், மேலாளர் நிதி ஆனந்த் அண்ணாமலை, துணைப் மேலாளர் சிவில்எஸ்.ஸ்ரீதரன்,பொடையூர் இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال