Sunday, September 22, 2024

பென்னாகர பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அமைப்பதற்கான நிதி ஒதுக்கியது திமுக வா, பாமக வா?

பென்னாகரம், செப்.22:

பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியது பாமகவா, திமுகவா என இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு நுழைவு வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை அணை தடுத்து பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிக்கென கடந்த 2019 ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூம் 4.50 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று. பென்னாகரம் பேருந்து நிலைய பணி 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் கூடுதலாக தரைத்தளம் உள்ளிட்ட இதர பணிகளுக்காக பேரூராட்சிகளின் பொது நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு நுழைவு வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. நுழைவு வாயில் அமைப்பதற்கு திமுக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து விவசாயிகள் தொழிலாளர்கள் அணி துணை தலைவர் பி.என்.பி. இன்பசேகரன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பூமி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து போது, பாமகவினர் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி ரூ. 39 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பூமி பூஜைக்கு முறையான அழைப்பு விடுக்காமல் நுழைவு வாயில் அமைப்பதற்கான பணியினை திமுக மறைமுகமாக செய்வதாக தெரிவித்து தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையிலான இருவருக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பூமி பூஜை அமைக்கப்பட உள்ள இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பாமக பிரமுகர்கள் பேருந்து நிலையத்தில் நுழைவு வாயிலின் முன்பு நிறுத்தினர். நீண்ட நேரமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்ட போது பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த திமுக நிர்வாகியின் காரை பாமகவினர் தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக, பாமகவினரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பூமி பூஜை நிகழ்வை தற்காலிகமாக நிறுத்துவதாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திமுகவினர் அங்கிருந்து திரும்பி சென்றனர். இருப்பினும் பாமக தரப்பினர் தொடர்ந்து காவல்துறையினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Labels:

Saturday, September 14, 2024

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம்!


சேலம் செப் 14-


சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பழனி முருகன் வரவேற்புரை ஆற்றினார்.மாநில பொருளாளர் ராஜேஷ் நன்றியுரை ஆற்றினார். சேலம் மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும், மேலும் தமிழகம் முழுவதும் கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் இல்லையெனில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டு போட்டு பூட்டும் போராட்டத்தை தீவிரப் படுத்துவோம். அதற்கும் தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளையும் மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் நடத்துவோம் என்றும் பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Labels: